Saturday 18th of May 2024 12:24:46 AM GMT

LANGUAGE - TAMIL
டெஸ்ட் தொடர்
இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவுஸ்ரேலியா திட்டம்!

இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவுஸ்ரேலியா திட்டம்!


இந்திய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வி;ளையாட அவுஸ்ரேலிய திட்டமிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சகல கிரிக்கெட் தொடர்களும் இரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன. இந்நிலையில் அவுஸ்ரேலியா கடந்த மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு தனது நாட்டு எல்லையை மூடியுள்ளது.

உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் நிலையை பொறுத்து செப்டம்பருக்கு பின்னரே அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறலாம். இதே நிலைதான் பெரும்பாலான நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளுக்கும் பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலமைi சீரான கையோடு போட்டிகளை நடத்தி வருமானம் ஈட்டுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

வரும் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை அவுஸ்ரேலியாவில் உலகக்கிண்ண ரீ-20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதுவும் நடக்குமா இல்லையா என்பது தெரியாத நிலையே காணப்படுகிறது.

வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் அவுஸ்ரேலிய சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிகமாக ஒரு போட்டியை சேர்த்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடத்துவதற்கு அவுஸ்ரேலியா திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா, இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE